ஆசிரியை நீ!
என் தூரிகைப் பிடித்து
உயிர் ஓவியம் எழுதக்
கற்பித்தவள்..
உன்னை வரைய
என்னைப் பிழிந்து
என்னை அறிய
தன்னையே கொடுத்தவள்..
உயிரும் மெய்யும்
உருகும் கலையை
உணர்வின் உச்சம்
பருகும் கலையை
அள்ளிக் கொடுத்த
அமுத சுரபி நீ..
ஓ!
அந்த இரவின்
ஒவ்வொரு துளியும்
என் அனுக்களில்
அமுதம் நிரம்பி வழிறது..
மேகம் கணத்து
நீர் பெருக்கெடுத்தால்
பயிர் செழிக்கும்
என் தேகம் கணத்து
நீர் பெருக்கினாய்
உயிர் செழிக்கிறது,.
செல்லம்
புஜ்ஜிமா
கண்ணம்மா
குட்டிமா
குண்டம்மா..
அத்தனையும் விட
அதிகமாய் இனிக்கிறது
உயிர் உருகளின்போது
நாம் எழுப்பும்
ஒலி வடிவங்கள்....
உன் அனுமதிகளில்
நிரூபணமாகிறது
உனக்கும் எனக்குமான
புனிதம்..
உன்
விரல்களின் ஸ்பரிசத்தில்
ஒழிந்து கிடக்கிறது
எனக்கானப் பிறவிப் பயன்..
உன் சிணுங்கல்களில்
கட்டி எழுப்பப் படுகிறது
எனக்கான சிறு சிறு
சுவர்க்கங்கள்..
உன் மூச்சுக் காற்றில்
செத்து மடிகிறது
என் பேச்சுக்கள்..
என் ஏக்கத்தை
எதிர்கொள்ளும் பொழுதுகளில்
கூசுகிறது என்கிறாய்
இப்பொழுது
நானல்லவா
அதிகம் கூசுகிறேன்
அத் தாக்கத்தை எழுதும்
வரிகளில்..
அட !
என்ன விந்தை இது
நான் மட்டுமல்ல
நீ கூட "விந்தை" செய்கிறாய்..
ஆம்!
அந்த இரவே
நம் அன்பின்
ஒட்டுமொத்த அடையாளம்...
No comments:
Post a Comment