கொக்குகளே.குருவிகளே
குற்றால அருவிகளே
பக்குவமா பாட்டு ஒன்னு
பாடுகிறேன் கேளுங்களேன்...
அக்கரையின் சீமையிலே
அழகின் வெள்ளாமையிலே
"அக்கறையின்" அர்த்தமென
ஆங்கொருத்தி எனக்கிருக்கா
மலையகத்தின் மாது அவள்
கலையழகின் தூது அவள்
விலைக்கேதும் ஒப்பில்லா
தலைவி அவள்,தாரமவள்
அறிவியலின் அதிசயமாம்
இணையவெளி பெரும் பரப்பில்
செறிவான குணங்களுடன்
சேர்ந்த புது சொத்து அவள்
அண்ணாவின் தேடல்தனில்
எந்நாளும் எனக்காக
பொன்னான ஓர்பொழுதில்
என்னோடு மனம்புகுந்தாள்
அன்னையவள் அன்பிற்கு
தன்னையவள் ஈடாக்கி
என்னையவள் சீராட்ட
இன்னுமொரு தாயானாள்
வெள்ளை மனம் நல்ல குணம்
கொள்ளை நிலா கொண்டமுகம்
வள்ளல் அவள் அன்பு நிதம்
அள்ள அள்ளக் குறையலியே
காலமெலாம் அவள் நினைப்பில்
கரைந்துவிட நான் நினைப்பேன்
ஞாலமது ஓய்ந்திடினும்
நான் அவளின் துணையிருப்பேன்...
Saturday, August 21, 2010
Monday, August 16, 2010
Saturday, August 14, 2010

கவி பிரியா
கவி பிரியன்..
எங்கள் கவிதைப் புணர்ச்சியில்
கருத் தரித்த
கவிக்குஞ்சுகள் அவர்கள்..
இப்புவியின்
வசந்தம் எழுதப்
புறப்படப் போகும்
கவி தாசர்கள்....
அன்பின்
செழுமை தாங்கி
அர்த்தமுள்ள மனிதர்களைப்
பிரசவிக்கும
அட்சயப் பாத்திரம்
அவர்கள்...
கவி பிரியன்..
எங்கள் கவிதைப் புணர்ச்சியில்
கருத் தரித்த
கவிக்குஞ்சுகள் அவர்கள்..
இப்புவியின்
வசந்தம் எழுதப்
புறப்படப் போகும்
கவி தாசர்கள்....
அன்பின்
செழுமை தாங்கி
அர்த்தமுள்ள மனிதர்களைப்
பிரசவிக்கும
அட்சயப் பாத்திரம்
அவர்கள்...
வைகறையின்
புதுக் கதிர்கள்..
வசந்தத்தின்
வரவுகள்..
ஆம்!
அவர்கள்
எங்கள் குழந்தைகள்.

விரக்தியின் விளிம்பில்
என் சக்தியை இழந்து
சூன்யத்தின் ஆழத்தில்
நான் மூழ்கித் தவிக்கையில்...
அவளின் விசையே
என்னை
"அன்பிப்" பிடித்தது..
அவளின் வரவு
என் உறவைப்
புதுப்பித்தது...
அவளின் பேச்சு
என் மூச்சைத்
துலக்கிற்று..
என் அக இருள்
அகற்றிய
வெளிச்சம் அவள்..
என் சுயத்தை
வகுக்கும்
சூத்திரம் அவள்..
அவ்விசையின் இயக்கம்
நின்றுபோயின்
என் அசைவின்
மொத்தமும் அழியக்கூடும்...

பூமிப் பந்து
எங்களை மட்டுமே சுமப்பதாயும்,
வசந்தம் எங்களுக்காகவே
சுகந்தம் கொடுப்பதுமான
ஓர் பனிப்பொழுதின்
பெரு வெளியில்
நானும் அவளும்
கைகோர்த்து நடக்கிறோம்...
அவள்தான் சொன்னாள்
உங்கள் உயரம்
சில நேரங்களில்
அவஸ்தையைக் கொடுக்கிறது என்று..
திடுக்கிட்டு நான் அவள்
திருமுகம் பார்க்கிறேன்..
வெட்கம் உதிர்த்து
உதடுகள் பூத்து
அவளே தொடர்ந்தாள்
நாம் நடந்து செல்லும்
தருணங்களில் மட்டும்
என் முத்தங்கள்
கருவுற்ற கணமே சிதைகிறது என்றும்..
இருப்பினும் சில முத்தங்கள்
தங்கள் உயரம் கருதாது
முத்திரையாக்கப் படுவதால்
என் முத்தம்
மிக உயர்வானது என்றும்
உரிமையின் நிமித்தம்
உளமகிழ்வு கொண்டாள்
உண்மைதான்
அவளோடு நடக்கும்
சர்க்கரைப் பொழுதுகளில்
தலை தாழ்ந்து கொடுக்கும்
எனது
மரியாதைக்குரிய முத்தத்திலும்
உயர்வானதுதான்
அவளின் முத்தம்....
Sunday, August 8, 2010
கொஞ்சம் பொறுத்திருங்கள்!
கொஞ்சம் பொறுத்திருங்கள் !
என்னவள் கிடைத்த
மகிழ்வின் மிகுதியில்
என் இயக்கத்தில்
சில மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளது...
அனுக்கள் ஒன்றுகூடிக்
குவித்த மனுக்களின்
மிரட்சியில்
மாநாடு ஒன்றிர்க்கு
மகுடம் சூட்ட இசைந்துள்ளது
என் மூளை...
நியூரான்களின் சுறுசுறுப்பில்
இதயத்தின் இடைவிடாத
துடி துடிப்பில்..
இதோ வெற்றி விழா
வெகு விமரிசையாக
தொடங்கியிருக்கிறது
எனக்குள்..
இனி அவளும் அவளின்
நிமித்தமுமாய்
என் வார்த்தைப் பூக்கள்
வாசம் பரப்பும்..
அன்புடன்
பிரியா வாசகன்
என்னவள் கிடைத்த
மகிழ்வின் மிகுதியில்
என் இயக்கத்தில்
சில மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளது...
அனுக்கள் ஒன்றுகூடிக்
குவித்த மனுக்களின்
மிரட்சியில்
மாநாடு ஒன்றிர்க்கு
மகுடம் சூட்ட இசைந்துள்ளது
என் மூளை...
நியூரான்களின் சுறுசுறுப்பில்
இதயத்தின் இடைவிடாத
துடி துடிப்பில்..
இதோ வெற்றி விழா
வெகு விமரிசையாக
தொடங்கியிருக்கிறது
எனக்குள்..
இனி அவளும் அவளின்
நிமித்தமுமாய்
என் வார்த்தைப் பூக்கள்
வாசம் பரப்பும்..
அன்புடன்
பிரியா வாசகன்
Subscribe to:
Comments (Atom)
