Saturday, August 14, 2010



கவி பிரியா
கவி பிரியன்..

எங்கள் கவிதைப் புணர்ச்சியில்
கருத் தரித்த
கவிக்குஞ்சுகள் அவர்கள்..

இப்புவியின்
வசந்தம் எழுதப்
புறப்படப் போகும்
கவி தாசர்கள்....

அன்பின்
செழுமை தாங்கி
அர்த்தமுள்ள மனிதர்களைப்
பிரசவிக்கும
அட்சயப் பாத்திரம்
அவர்கள்...


வைகறையின்
புதுக் கதிர்கள்..

வசந்தத்தின்
வரவுகள்..

ஆம்!
அவர்கள்
எங்கள் குழந்தைகள்.

No comments:

Post a Comment